Wednesday, August 12, 2009

பகுதி:18 - பாவங்கள் அறியாமையால் செய்யப்படுவது. ஒரு பாவி இறைவனுக்கு இணை வைக்காத வரை இறை மறுப்பாளர் ஆக மாட்டார்.

அபூ தர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் ஒரு மனிதரை அவரது தாயை கெட்ட பெயர் சொல்லி திட்டிவிட்டேன். நபி (ஸல்) என்னிடம் கூறினார்கள், அபூ தரே! நீர் அவரை அவரது தாயை கேட்ட பெயர் சொல்லி திட்டினீரா? உம்மிடம் இன்னும் அறியாமையின் குணங்கள் உள்ளன. உங்களது அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் அவர்களை உங்களது அதிகாரத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, யாரேனும் ஒருவர், ஒரு சகோதரரை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டிருந்தால், தான் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும்; தான் அணிவதிலிருந்து அவருக்கும் அணிவிக்க வேண்டும். அவர்களை (அடிமைகளை) அவர்களது சக்திக்கு மீறிய செயலை செய்யச் சொல்லக் கூடாது. நீங்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு (அவ்வேலையில்) உதவியாய் இருங்கள்." (ஸஹீஹ் புஹாரி: 1:29)

No comments:

தமிழில் டைப் செய்ய: