இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) கூறினார்கள், "நான் நரக நெருப்பை காண்பிக்கப் பட்டேன். அதில் பெரும்பான்மையோர் இறை மறுப்பாளர்களான (அல்லது நன்றி மறந்தவர்களான) பெண்களாக இருந்தார்கள்."
அப்போது, "அவர்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்? (அல்லது அவர்கள் அல்லாஹ்விடமா நன்றி மறந்தவர்களாய் இருக்கிறார்கள்?)" என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்), "அவர்கள் தமது கணவன்மார்களிடம் நன்றி மறந்தவர்களாய் இருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் மற்றும் நன்மைகளை அவர்கள் மறந்துவிடுகின்றனர். நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு ஒரு காலப் பகுதியில் (அல்லது காலம் முழுதும்) நன்மைகளை செய்துக் கொண்டேயிருந்து, பின்னர் அவள் உங்களிடம் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை கண்டால், நான் ஒருபோதும் உன்னிடம் எந்த நன்மையையும் கண்டதில்லை என்று சொல்வாள். " என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:128)
No comments:
Post a Comment