Saturday, August 8, 2009

பகுதி-16: உயிருக்கு பயந்தோ, சுய விருப்பமின்றியோ இஸ்லாத்தை ஏற்பது பற்றி:

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடம் ஒரு பொருளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், நான் மிகவும் அறிந்திருந்த ஒருவருக்கு கொடுக்காமல் விட்டு விட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் அவரை உண்மையான விசுவாசியாக கருதுகிறேன்" என்றேன். நபி (ஸல்), "அல்லது ஒரு சாதாரண முஸ்லீம்" என்று கூறினார்கள். நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். இருந்தாலும், நான் அந்த மனிதரைப் பற்றி மிகவும் அறிந்திருந்ததால், நபியிடம் என்னையும் மீறி திரும்பவும் கேட்டேன். பின்னர், அல்லாஹ்வின் தூதரிடம், "அந்த மனிதரை ஏன் விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர் உண்மையான விசுவாசி" என்றேன். நபி (ஸல்), "அல்லது ஒரு சாதாரண முஸ்லீம்" என்று மீண்டும் கூறினார்கள். அந்த மனிதரைப் பற்றி நான் அறிந்திருந்ததால் என்னால் மீண்டும் அதே கேள்வியை கேட்காமல் இருக்கமுடியவில்லை. அதன் பின்னர் நபி (ஸல்) கூறினார்கள், "சஅதே, மற்றொருவர் எனக்கு நேசமிக்கவராக இருப்பினும்,(அவருக்குக் கொடுக்காமல்), வேறு ஒருவருக்கு, அவர் அல்லாஹ்வால்நரகத்தில் குப்புற வீசப்பட்டு விடுவாரோ என்று பயப்படுவதால் கொடுக்கிறேன்" என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:26)

குறிப்பு: அந்த மனிதர் கொடுக்கப்படாவிட்டால், ஏதேனும் குற்றமிழைத்து நரகில் வீசப்பட்டு விடுவாரோ என்று பயந்ததால், 'அத் (ரலி) குறிப்பிட்ட இந்த மனிதருக்கு கொடுக்காமல் அந்த மற்றொரு மனிதருக்கு நபி(ஸல்) கொடுத்தார்கள்.
மன்னிக்கவும். மொழி பெயர்ப்பு இந்த இடத்தில் சரியாக வரவில்லை. யாராவது திருத்திக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன், இன்ஷா அல்லாஹ்.

In English:
............ Then the Prophet (PBUH) said, "O Sa'ad, I give to a person while another is dearer to me, fearing that he might be thrown on his face in the fire by Allah"

No comments:

தமிழில் டைப் செய்ய: