Tuesday, August 4, 2009

பகுதி:12 - விசுவாசிகளின் ஏற்றத் தாழ்வு நிலைகள் அவர்களின் நன்மைகளை பொறுத்ததே - 2

(அபூ சஈத்-அல்-குத்ரி (ரலி)) அறிவித்தார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது (கனவில்) சில மனிதர்கள் சட்டைகளை அணிவிக்கப்பட்டவர்களாக என்முன் எடுத்துக் காட்டப்பட்டனர். அவர்களில் சிலரது சட்டை அவர்களது மார்பளவுக்கு மட்டும் இருந்தது. மேலும், சிலரது சட்டை அதற்கும் சிறியதாக இருந்தது. உமர் பின் கத்தாப் (ரலி) (தரையில்) இழுபடும் அளவு நீண்ட சட்டையை அணிந்தவராக என்னிடம் காட்டப்பட்டார்." என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே, அதற்கு தாங்கள் எப்படி விளக்கமளிக்கிறீர்கள்?" என்று கேட்டனர். நபி (ஸல்), "அது மார்க்கம்" என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:22)

குறிப்பு: அதாவது, அந்த சட்டை என்பது மார்க்கம் என்று பதிலளித்தார்கள்.

No comments:

தமிழில் டைப் செய்ய: