Sunday, December 6, 2009

பகுதி - 21: நயவஞ்சகனின் அடையாளங்கள்:

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. அவையாவன:
அவன் பேசினால் பொய்யே பேசுவான்; வாக்குறுதி கொடுத்தால் அதை முறித்துவிடுவான்; அவனை நீங்கள் நம்பினால், அவன் நேர்மையற்றவன் என்பதை நிரூபிப்பான்." - ஸஹிஹ் புஹாரி (1:32)

----------------------------------------------------------------------------------------

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) நவின்றார்கள், "எவனிடம் கீழ்க்கண்ட நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் ஒரு சுத்தமான (வடி கட்டிய) நயவஞ்சகனாவான். எவனிடம் கீழ்க்கண்ட நான்கு குணங்களில் ஒன்றாவது கொண்டிருக்கிறாரோ, அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு தன்மை அவனிடம் இருந்துக் கொண்டேயிருக்கும்.
- நம்பினால் மோசம் செய்வான்.
- பேசினால் பொய்யே பேசுவான்.
- ஒப்பந்தம் சாய்த்தால் மீறுவான்.
- விவாதம் செய்தால் நியாயமற்ற முறையிலும், தீய மற்றும் மற்றவரை புண்படுத்தும் வகையிலும் நடந்துக் கொள்வான்." (ஸஹீஹ் புஹாரி: 1:33)

Friday, August 28, 2009

பகுதி: 20 - அக்கிரமங்களில் ஏற்றத் தாழ்வுகள்

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) அறிவித்தார்கள்:
"இறை நம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தை கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும், அவர்களே நேர் வழி பெற்றவர்களுமாவார்" (அல் குர்ஆன்:6:82) என்ற இறை வசனம் அருளப்பட்ட போது நபித் தோழர்கள், அல்லாஹ்வின் தூதரிடம், "நம்மில் அக்கிரமம் செய்தோர் யார்?" என்று கேட்டனர். பின்னர் அல்லாஹ், "நிச்சயமாக, வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பது தான் மிகப் பெரிய அக்கிரமமாகும்" (அல் குர்ஆன்:31:13) என்ற வசனத்தை அருளினான். (ஸஹீஹ் புஹாரி:1:31)

Thursday, August 13, 2009

பகுதி:19 - விசுவாசிகளிலிருந்து இரு குழுக்கள் போரில் ஈடுபட்டால் அவர்களிருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துங்கள்.

அல்லாஹ் கூறுகிறான், "விசுவாசிகளிலிருந்து இரு குழுக்கள் போரில் ஈடுபட்டால் அவர்களிருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துங்கள்... (அல் குர்-ஆன்:49:9)

அபூ பக்ராஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
"முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் வாளெடுத்து சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொலை செய்தவர் மற்றும் கொலை செய்யப்பட்டவர் ஆகிய இருவருமே நரகிற்குத் தான் செல்வர்." என்று அல்லாஹ்வின் தூதர் கூறக் கேட்டேன். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே, கொலை செய்தவர் (நரகிற்கு) செல்வது சரி. ஆனால், கொலை செய்யப் பட்டவரை பற்றி என்ன? (கொலை செய்யப் பட்டவர் ஏன் நரகிற்கு செல்ல வேண்டும்?)" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அவர் தனது நண்பரை (முஸ்லீம் சகோதரரை) கொல்ல நாட்டம் கொண்டிருந்தார்." என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:130)

Wednesday, August 12, 2009

பகுதி:18 - பாவங்கள் அறியாமையால் செய்யப்படுவது. ஒரு பாவி இறைவனுக்கு இணை வைக்காத வரை இறை மறுப்பாளர் ஆக மாட்டார்.

அபூ தர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் ஒரு மனிதரை அவரது தாயை கெட்ட பெயர் சொல்லி திட்டிவிட்டேன். நபி (ஸல்) என்னிடம் கூறினார்கள், அபூ தரே! நீர் அவரை அவரது தாயை கேட்ட பெயர் சொல்லி திட்டினீரா? உம்மிடம் இன்னும் அறியாமையின் குணங்கள் உள்ளன. உங்களது அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் அவர்களை உங்களது அதிகாரத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, யாரேனும் ஒருவர், ஒரு சகோதரரை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டிருந்தால், தான் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும்; தான் அணிவதிலிருந்து அவருக்கும் அணிவிக்க வேண்டும். அவர்களை (அடிமைகளை) அவர்களது சக்திக்கு மீறிய செயலை செய்யச் சொல்லக் கூடாது. நீங்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு (அவ்வேலையில்) உதவியாய் இருங்கள்." (ஸஹீஹ் புஹாரி: 1:29)

Monday, August 10, 2009

பகுதி-17: கணவனுக்கு நன்றி மறப்பவளாயிருப்பது. இறை நிராகரிப்பின் நிலைகள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) கூறினார்கள், "நான் நரக நெருப்பை காண்பிக்கப் பட்டேன். அதில் பெரும்பான்மையோர் இறை மறுப்பாளர்களான (அல்லது நன்றி மறந்தவர்களான) பெண்களாக இருந்தார்கள்."
அப்போது, "அவர்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்? (அல்லது அவர்கள் அல்லாஹ்விடமா நன்றி மறந்தவர்களாய் இருக்கிறார்கள்?)" என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்), "அவர்கள் தமது கணவன்மார்களிடம் நன்றி மறந்தவர்களாய் இருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் மற்றும் நன்மைகளை அவர்கள் மறந்துவிடுகின்றனர். நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு ஒரு காலப் பகுதியில் (அல்லது காலம் முழுதும்) நன்மைகளை செய்துக் கொண்டேயிருந்து, பின்னர் அவள் உங்களிடம் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை கண்டால், நான் ஒருபோதும் உன்னிடம் எந்த நன்மையையும் கண்டதில்லை என்று சொல்வாள். " என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:128)

Saturday, August 8, 2009

பகுதி-16: உயிருக்கு பயந்தோ, சுய விருப்பமின்றியோ இஸ்லாத்தை ஏற்பது பற்றி:

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடம் ஒரு பொருளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், நான் மிகவும் அறிந்திருந்த ஒருவருக்கு கொடுக்காமல் விட்டு விட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் அவரை உண்மையான விசுவாசியாக கருதுகிறேன்" என்றேன். நபி (ஸல்), "அல்லது ஒரு சாதாரண முஸ்லீம்" என்று கூறினார்கள். நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். இருந்தாலும், நான் அந்த மனிதரைப் பற்றி மிகவும் அறிந்திருந்ததால், நபியிடம் என்னையும் மீறி திரும்பவும் கேட்டேன். பின்னர், அல்லாஹ்வின் தூதரிடம், "அந்த மனிதரை ஏன் விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர் உண்மையான விசுவாசி" என்றேன். நபி (ஸல்), "அல்லது ஒரு சாதாரண முஸ்லீம்" என்று மீண்டும் கூறினார்கள். அந்த மனிதரைப் பற்றி நான் அறிந்திருந்ததால் என்னால் மீண்டும் அதே கேள்வியை கேட்காமல் இருக்கமுடியவில்லை. அதன் பின்னர் நபி (ஸல்) கூறினார்கள், "சஅதே, மற்றொருவர் எனக்கு நேசமிக்கவராக இருப்பினும்,(அவருக்குக் கொடுக்காமல்), வேறு ஒருவருக்கு, அவர் அல்லாஹ்வால்நரகத்தில் குப்புற வீசப்பட்டு விடுவாரோ என்று பயப்படுவதால் கொடுக்கிறேன்" என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:26)

குறிப்பு: அந்த மனிதர் கொடுக்கப்படாவிட்டால், ஏதேனும் குற்றமிழைத்து நரகில் வீசப்பட்டு விடுவாரோ என்று பயந்ததால், 'அத் (ரலி) குறிப்பிட்ட இந்த மனிதருக்கு கொடுக்காமல் அந்த மற்றொரு மனிதருக்கு நபி(ஸல்) கொடுத்தார்கள்.
மன்னிக்கவும். மொழி பெயர்ப்பு இந்த இடத்தில் சரியாக வரவில்லை. யாராவது திருத்திக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன், இன்ஷா அல்லாஹ்.

In English:
............ Then the Prophet (PBUH) said, "O Sa'ad, I give to a person while another is dearer to me, fearing that he might be thrown on his face in the fire by Allah"

Friday, August 7, 2009

பகுதி:15 - ஈமான் என்றாலே நற்செயல் என சிலர் வாதிடுகின்றனர்

அபு ஹுரைரா (ரலி) அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "செயல்களில் சிறந்தது எது?" என கேட்கப்பட்டதற்கு, அவர்கள், "அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (முஹம்மது [ஸல்]) மீதும் விசுவாசம் கொள்வது" என்று பதிலளித்தார்கள்.
கேள்வியாளர் மீண்டும், "(நற்செயல்களில்) அடுத்தது எது?" என்று கேட்டார். நபியவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது" என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் மீண்டும், "(நற்செயல்களில்) அடுத்தது எது?" எனக் கேட்டார். நபியவர்கள், "மப்ரூரான ஹஜ் செய்தல்" (அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி, மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக அல்லாமல் செய்யப்பட்ட ஹஜ். மேலும், பாவங்கள் எதிலும் ஈடுபடாமல், நபி வழியில் சரியான பேணுதலுடன் செய்யப்பட்ட ஹஜ்) என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:25)

Thursday, August 6, 2009

பகுதி:14 - இறைநம்பிக்கை

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
"மனிதர்களில், வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என உறுதியளித்து, தொழுகையை ஒழுங்காக நிலை நாட்டி, ஜகாத்தையும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுமாறு நான் (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆகவே, அவ்வாறு அவர்கள் செய்தால், அவர்களின் உயிர், உடமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்; இஸ்லாமிய சட்டங்களை தவிர (இஸ்லாமிய சட்டங்களில் வரம்பு மீறினால் ஒழிய). மேலும், அவர்களது விசாரணை (கணக்குகள்) அல்லாஹ்விடமே உள்ளது." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:24)

Wednesday, August 5, 2009

பகுதி-13: அல்-ஹயா ஈமானின் ஒரு பகுதி

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தெருவில் சென்றுக் கொண்டிருக்கும்போது அன்சாரி (மனிதர்) ஒருவர் தன் சகோதரரை அல்-ஹயா (அதிகமாக வெட்கப்படுவது) சம்பந்தமாக கண்டித்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அல்-ஹயா ஈமானின் ஒரு பகுதியாய் இருப்பதால் அவரை விட்டுவிடுங்கள்." என்று கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:23)

அல்-ஹயா என்ற இவ்வார்த்தை பெரும்பான்மையான அளவில் நற்குணங்களை குறிப்பதாகும். சுய மரியாதை, அடக்கம், வெட்கம், கண்ணியமான நடத்தை போன்றவை சில உதாரணங்களாகும்

Tuesday, August 4, 2009

பகுதி:12 - விசுவாசிகளின் ஏற்றத் தாழ்வு நிலைகள் அவர்களின் நன்மைகளை பொறுத்ததே - 2

(அபூ சஈத்-அல்-குத்ரி (ரலி)) அறிவித்தார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது (கனவில்) சில மனிதர்கள் சட்டைகளை அணிவிக்கப்பட்டவர்களாக என்முன் எடுத்துக் காட்டப்பட்டனர். அவர்களில் சிலரது சட்டை அவர்களது மார்பளவுக்கு மட்டும் இருந்தது. மேலும், சிலரது சட்டை அதற்கும் சிறியதாக இருந்தது. உமர் பின் கத்தாப் (ரலி) (தரையில்) இழுபடும் அளவு நீண்ட சட்டையை அணிந்தவராக என்னிடம் காட்டப்பட்டார்." என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே, அதற்கு தாங்கள் எப்படி விளக்கமளிக்கிறீர்கள்?" என்று கேட்டனர். நபி (ஸல்), "அது மார்க்கம்" என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:22)

குறிப்பு: அதாவது, அந்த சட்டை என்பது மார்க்கம் என்று பதிலளித்தார்கள்.

Monday, August 3, 2009

பகுதி:12 - விசுவாசிகளின் ஏற்றத் தாழ்வு நிலைகள் அவர்களின் நன்மைகளை பொறுத்ததே - 1

"சுவர்க்கவாதிகள் சுவனத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் புகும்போது கடுகளவேனும் இறைநம்பிக்கை கொண்டோரை நரகத்திலிருந்து வெளியேற்றும்படி அல்லாஹ் கட்டளையிடுவான். அதனால், அவர்கள் நரகிலிருந்து வெளியே எடுக்கப்படுவார்கள். ஆனால், அந்நேரம் அவர்கள் (கருகி) கருத்து இருப்பார்கள். பின்னர், அவர்கள் ஹயா அல்லது ஹயாத் (உயிர்) (அறிவிப்பாளர் எது சரியான வார்த்தை என்பதில் சந்தேகம் கொண்டுள்ளார்) என்ற நதியில் போடப்படுவர். அதனால் அவர்கள் உணவுக்கான நீரோடையின் கரைகளில் முளைக்கும் தானியத்தைப் போல பொலிவு பெறுவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக வருவதை நீங்கள் பார்த்ததில்லையா?" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சஈதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:21)

Sunday, August 2, 2009

பகுதி-11: நான் உங்கள் அனைவரையும் விட அல்லாஹ்வை மிக அதிகமாக அறிந்தவன் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் கூற்று

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு நல்ல காரியங்களை கட்டளையிடும்போது. அவர்களால் எந்த காரியத்தை இலகுவாக செய்ய முடியுமோ அதை (அவரவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு) மட்டுமே கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) , "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உங்களைப் போலல்ல. (எங்கள் நிலை தங்களுடையதை போன்றதன்று) அல்லாஹ் உங்களது முன் பின் பாவங்களை மன்னித்து விட்டான்." என்று கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்து விட்டார்கள். அந்த கோபம் அவர்களின் முகத்தில் தெரிந்து. பின்னர், நபி (ஸல்) கூறினார்கள், "நான் அல்லாஹ்வை மிகவும் அஞ்சுபவனாகவும், அல்லாஹ்வை உங்கள் அனைவரையும் விட மிகவும் அறிந்தவனாகவும் இருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:19)

Friday, July 31, 2009

பகுதி-10: குழப்பங்களை விட்டும் ஒதுங்கி ஓடுவது இஸ்லாத்தின் ஓரம்சம்

அபு சயீத் அல்-குத்ரி (ரலி) அறிவித்தார்கள்:
"ஒரு நேரம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் சொத்துக்களில் ஆடு தான் சிறந்தது. அவன் குழப்பங்களிலிருந்து தனது மார்க்கத்தை காப்பாற்றிக்கொள்ள அந்த ஆட்டை கூட்டிக்கொண்டு மலையுச்சிகளுக்கும் மழை பெய்யும் பகுதிகளுக்கும் ஓடுவான் (சென்று வாழ்வான்)."
என
நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி : 1: 18)

பகுதி-9: அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளம் - 2

உபாதா பின் அஸ்சாமித் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மைச் சுற்றி தமது தோழர்களின் குழுவுடன் அமர்ந்திருந்தபோது கூறினார்கள், "அல்லாஹ்வுடன் வணக்கத்தில் வேறு எதையும் இணைப்பதில்லை, திருடுவதில்லை, விபச்சாரம் செய்வதில்லை, உங்கள் குழந்தைகளை கொல்வதில்லை, யார் மீதும் வேண்டுமென்றே அவதூறு கூறுவதில்லை. நல்ல காரியங்களை (செய்ய கட்டளையிடும்போது) மாறு செய்வதில்லை என என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள்.
உங்களில் யார் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வால் நற்கூலி கொடுக்கப்படுவார்; யார் இந்த பாவங்களில் ஈடுபடுகிறாரோ அவர் இவ்வுலகில் தண்டனையை அனுபவிப்பார். அத்தண்டனை அவரின் பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும், ஒருவர் இப்பாவங்களில் ஈடுபட்டு அல்லாஹ் அவற்றை மறைத்துவிட்டால், அவரை மன்னிப்பதோ அல்லது தண்டிப்பதோ அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளதாகும் (நாட்டத்திலுள்ளதாகும்). " [எனவே, நாங்கள் அவ்வாறு நடப்போம் என உறுதிமொழி கொடுத்தோம்.] (ஸஹீஹ் புஹாரி : 1:17)

Thursday, July 30, 2009

பகுதி-9: அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளம் - 1

நபி (ஸல்) அவர்கள், "அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் (ஈமான்) அடையாளம். மேலும், அன்சார்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளம்." என நவின்றதாக அனஸ் (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி :1:16)



பொருட்குறிப்பு: மதீனாவில் வாழ்ந்த நபித் தோழர்கள் அன்சார்கள் என்றழைக்கப்படுவார்கள். மக்காவில் நபியவர்களுக்கு குறைஷிகள் பல தொல்லைகளை கொடுத்துக்கொண்டிருந்தபோது இஸ்லாத்தில் இணைந்து தங்களது ஒத்துழைப்பையும் கொடுத்து அகதிகளாக மதீனா வந்தவர்களுக்கு உதவிகள் பல செய்து தங்களுடனே வாழ வைத்துக்கொண்டவர்கள்.

ரோஜா மலர்

Wednesday, July 29, 2009

பகுதி-8: இறைநம்பிக்கையின் இனிய சுவை

அனஸ் (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) கூறினார்கள், "கீழ்க்கண்ட மூன்று (தன்மைகள்) எவரிடம் உள்ளனவோ அவர் ஈமானின் (இறை நம்பிக்கையின்) இனிய சுவையை உணர்ந்தவராவார்.
  1. ஒருவருக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் மற்றெல்லாவற்றையும் விட அதிக நேசதிற்குரியவராவது.
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிப்பது.
  3. இறை நிராகரிப்புக்கு திரும்புவதை நெருப்பில் தூக்கி எறியப்படுவதைப் போல் வெறுப்பது. " (ஸஹீஹ் புஹாரி:1:15)

Sunday, July 26, 2009

பகுதி-7: இறைத் தூதரை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னுடைய உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவரும், அவரது தந்தை மற்றும் அவரது பிள்ளைகளை விட நான் அவருக்கு அன்பானவராக ஆகும் வரை, இறை நம்பிக்கையாளராக மாட்டார்" என்று கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:13)
-------------------------------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "என்னுடைய உயிர் எவனது கைவசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக, உங்களில் எவரும் அவரது தந்தை, அவரது குழந்தைகள் மற்றும் ஏனைய மக்களை விட அதிகமாக என்னை நேசிக்கும் வரை இறை நம்பிக்கையாளராக மாட்டார்" என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:14)

பகுதி-6: தான் விரும்புவதை தனது சகோதரருக்கும் விரும்புவது ஈமானின் ஒரு பகுதி

அனஸ் (ரலி) அறிவித்தார்கள்: "நபி (ஸல்) கூறினார்கள், "தான் விரும்புவதையே தனது (முஸ்லீம்) சகோதரருக்கும் விரும்பும் வரை உங்களில் எவரும் (முழு) இறை நம்பிக்கையாளராக மாட்டார்." (ஸஹீஹ் புஹாரி:1:12)

பகுதி-5: உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓர் பகுதி

ஒரு மனிதர் நபியவர்களிடம் யாருடைய இஸ்லாம் சிறந்தது அல்லது இஸ்லாத்தில் எத்தகைய நற்செயல்கள் சிறந்தவை எனக் கேட்டதற்கு, (மற்றவருக்கு) உணவளிப்பதும் உங்களுக்கு தெரிந்தோருக்கும் தெரியாதோருக்கும் சலாம் சொல்லுவதுமாகும் என நபி (ஸல்) பதிலளித்ததாக அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி: 1:11)

Saturday, July 25, 2009

பகுதி-4: யார் சிறந்த முஸ்லீம்?

நபித் தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "யாருடைய இஸ்லாம் மிகச் சிறந்தது? (யார் சிறந்த முஸ்லிம்?)" எனக் கேட்டதற்கு, "எவர் ஒருவர் முஸ்லிம்களை தனது நாவாலோ அல்லது தனது கைகளாலோ துன்புறுத்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்கிறாரோ அவரது (செயலே சிறந்தது)" என பதிலளித்தார்கள் என்று அபூ மூசா (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:10)

குறிப்பு: "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கின்றனரோ அவரது செயலே" என்ற கருத்தையும் சில தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பதிந்துள்ளனர்.

Friday, July 24, 2009

பகுதி-3: பிற முஸ்லிம்களுக்கு தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தறாதவரே முஸ்லீம்.

எவரொருவர் தனது நாவினாலும், கைகளாலும் பிற முஸ்லிம்களுக்கு தீமை விளைவிக்காமல் இருக்கிறாரோ அவரே முஸ்லிமாவார். அல்லாஹ்வால் தடுக்கப்பற்றவற்றை எவர் துறக்கின்றாரோ அவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அறிவித்தார்கள். (புஹாரி:1:9)

Thursday, July 23, 2009

பகுதி - 2: ஈமான் எனும் இறை நம்பிக்கையின் காரியங்கள்.

அபு ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "விசுவாசம் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக (பகுதிகளாக) உள்ளது. அல்-ஹயா (அல்-ஹயா என்ற இவ்வார்த்தை பெரும்பான்மையான அளவில் நற்குணங்களை குறிப்பதாகும். சுய மரியாதை, அடக்கம், வெட்கம், கண்ணியமான நடத்தை போன்றவை சில உதாரணங்களாகும்) ஈமானின் ஒரு பகுதியாகும்." எனக் கூறினார்கள். (புஹாரி:1:8)

Wednesday, July 22, 2009

பகுதி-1: இஸ்லாம் ஐந்து காரியங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை; முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஜக்காத்து வழங்குதல், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் (புஹாரி:1:7)

பின் குறிப்பு:

தொழுகையை நிலை நிறுத்துதல்: ஐந்து நேரமும் குறிப்பிட்ட நேரத்தில் தொழுதல். எழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கண்டித்தும், பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தண்டித்தும் தொழ வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. தங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட முஸ்லிம்களின் தொழுகையில் பொடுபோக்குத் தனம் இருந்தால், அந்த குடும்ப, நகர, சமூக தலைவர், இஸ்லாமிய அரசின் தலைவர் ஆகியோர் அல்லாஹ்விடம் அதற்குப் பொறுப்பாக்கபடுவார்கள். (மேற்கோள்: புஹாரி அடிக்குறிப்பு)

Tuesday, July 21, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 5

(இப்னு அப்பாஸ் ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகுந்த கொடையாளியாக திகழ்ந்தார்கள்; மேலும் ரமலான் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்திக்கும்போது மிக மிக அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். அவர் (ஜிப்ரீல்) ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் சந்தித்து (அது வரை அருளப்பட்டிருந்த) குர்-ஆனை நினைவுபடுத்துவார். இருவருமாக குர்-ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசி மழை தரும் காற்றை விட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே இருந்தார்கள். (புஹாரி:1:5)

Monday, July 20, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 4

"அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்" (அல்-குர் ஆன் 75:16) என்ற அல்லாஹ்வின் திருவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும்போது கீழ்கண்டவாறு விவரித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அவர்கள் தனது நாவினை (வேகமாக) அசைத்து ஓதினார்கள்."
மேலும், இப்னு அப்பாஸ் தன்னுடைய உதடுகளை அசைத்துக்காட்டியவாறு சொன்னார்கள்: (உங்களிடம்) நான் எனது உதடுகளை அசைத்தது போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது உதடுகளை அசைப்பார்கள். ஆகவே, அல்லாஹ், "அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர். (உம்முடைய நெஞ்சத்தில்) அதனை சேகரமாக்குவதும் (உம்முடைய நாவினால்) அதனை ஒதவைப்பதும் நமது பொறுப்பாகும். எனவே, அதனை (ஜிப்ரீலின் மூலம்) நாம் ஓதினால் பின்னர் அதன் ஒதுதலைத் தொடர்ந்து (ஓதிக்) கொள்வீராக. பிறகு, அதனை விளக்குவதும் நம் மீதே பொறுப்பாகும்." ( அல்-குர் ஆன் 75:16-19) என்ற இறைவசனத்தை இறக்கியருளினான்.
அதன் பின்னர் நபியவர்கள் ஜிப்ரீல் வரும்போது செவி தாழ்த்தி கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஜிப்ரீல் சென்ற பிறகு ஓத ஆரம்பிப்பார்கள். (புஹாரி:1:4)

சீன வினோதங்கள்

இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வந்திருக்கலாம். அனால், பார்த்தமாத்திரத்தில் இதை பிரசுரிக்கலாமே என்று நினைத்தேன். இது just cut & paste தான்.



























Sunday, July 19, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 3B

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி) வஹீ தற்காலிகமாக நின்றிருந்த இடைக்காலத்தை பற்றி கூறும்போது நபி (ஸல்) அவர்களின் பேச்சைப் பற்றி அறிவித்தார்கள்: "நான் நடந்து சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென வானத்திலிருந்து ஒரு சப்தத்தை கேட்டேன். நான் அண்ணார்ந்து பார்க்கும்போது, ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர், வானத்துக்கும் பூமிக்குமிடையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவரைக் கண்டு பயந்தவனாக (வீட்டுக்கு) திரும்பி வந்து 'என்னை போர்த்துங்கள்' என்றேன். அதன் பின்னர் அல்லாஹ் கீழ்க்கண்ட (குர் ஆனின்) திரு வசனங்களை இறக்கினான். "போர்வை போர்த்தியவரே எழும். (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும். ... மேலும் அர்-ருஜ் (சிலைகள்) இடமிருந்து விலகி இரும். " (அல் குர் ஆன்:74:1-5)
அதன் பின்னர், இறைச்செய்தி வருவது பலமாகவும் ஒன்றன் பின் ஒன்றான தொடராகவும் ஆரம்பித்தது." (புஹாரி: 1:3B)

Saturday, July 18, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 3A

விசுவாசிகளின் அன்னையர் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதருக்கு (ஸல்) வஹீ நல்ல பகலொளியைப்போன்ற உண்மையான கனவாக ஆரமித்தது. அதன் பின்னர் தனித்திருப்பதன் மீதான விருப்பம் அவர் மீது அருளப்பட்டது. அவர் ஹிரா குகைக்குச்சென்று தொடர்ந்து பல இரவுகள், அவரது குடுமபத்தினரிடம் திரும்புமுன்னர், தனித்திருந்து அல்லாஹ்வை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அங்கு தங்கியிருப்பதற்கான பிரயாண உணவை தம்முடன் கொண்டு செல்வார். பின்னர் மீண்டும் உணவை எடுத்துச்செல்வதற்காக (தனது மனைவி) கதீஜா (ரலி) யிடம் திரும்பிவருவார். இந்நிலை, ஒரு நாள் திடீரென சத்தியம் ஹிரா குகையில் அவர் மீது இறங்கும் வரை நீடித்தது. அவரிடம் வானவர் வந்து "ஓதும்" என வினவினார். நபி (ஸல்) பதிலுரைத்தார், "எப்படி ஒதுவதென்று நான் அறியேன்."
மேலும், நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், "பின்னர் அந்த வானவர் என்னை பிடித்து என்னால் அதற்க்கு மேலும் தாங்கமுடியாத வண்ணம் அணைத்தார். பின்னர், அவர் என்னை விடுவித்து மீண்டும் ஓதும்படி கூறினார். நான் பதிலுரைத்தேன், "எப்படி ஒதுவதென்று நான் அறியேன்." அதன் பின்னர் இரண்டாவது முறையாக என்னால் தாங்கமுடியாத வண்ணம் அணைத்தார். பின்னர், அவர் என்னை விடுவித்து மீண்டும் ஓதும்படி கூறினார்.
ஆனால், மீண்டும் நான் பதிலுரைத்தேன், " "எப்படி ஒதுவதென்று நான் அறியேன் (அல்லது நான் என்ன ஓதுவது?)." அதன் பின்னர் மூன்றாவது முறையாக என்னை அணைத்து விடுவித்த பின் கூறினார், "படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதும். மனிதனை ஓர் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் மிகவும் கண்ணியமிக்கவன். (அல்-குர்ஆன் 96:1-3)"
அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தன் இதயம் பட படக்க வகீயுடன் வீட்டுக்குத் திரும்பினார். பின்னர், கதீஜா பின்த் குவாலித் (ரலி) யிடம் சென்று, "எனனை போர்த்து, எனனை போர்த்து" என்றார். அவரிடமிருந்து பயம் விலகும் வரை அவரை போர்த்தியிருந்தனர். அதன் பின்னர் அங்கு நடந்தவற்றை கதீஜா (ரலி) யிடம் கூறிவிட்டு தனக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்.
கதீஜவோ, "அவ்வாறில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லா உங்களை இழிவு படுத்தமாட்டான். நீங்கள் உங்கள் உற்றார் உறவினருடன் நல்லுறவு வைத்துள்ளீர்கள். ஏழைகள் மற்றும் வரியவர்களுக்கு உதவுகிறீர்கள். உங்கள் விருந்தினரை உபசரிக்கிறீர்கள். மேலும், சோதனைக்கு ஆட்பட்டோருக்கு உதவுகிறீர்கள்." என்று கூறி கதீஜா (ரலி) தன்னுடைய தந்தையின் உடன் பிறந்தவரின் மகனான வரகா பின் நவ்பல் பின் அசத் பின் அப்துல் உஜ்ஜா விடம் அழைத்துச் சென்றார். வரகா அறியாமை காலத்திலேயே கிருஸ்தவராக மாறி ஹீப்ரு மொழியில் எழுதுபவராகவுமிருந்தார். அவர் இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அல்லாஹ் நாடிய அளவிற்கு எழுதுபவர். அவர் ஓர் வயது முதிர்ந்தவர்,பார்வையையும் இழந்திருந்தார்.
கதீஜா (ரலி) அவரிடம் கூறினார், "என்னுடைய ஒன்று விட்ட சகோதரரே, தங்களின் சகோதரன் மகன் கூறுவதை கேளும்."
வரகா கேட்டார், "என் சகோதரர் மகனே, நீர் என்ன பார்த்தீர்?"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தான் கண்டவற்றை விவரித்தார்.
வரகா கூறினார், "இவர் தான் அல்லாஹ்வால் மூஸாவுக்கு அனுப்பப்பட்டவர். நான் என் இளமையில் இருந்து உமது மக்கள் உம்மை துரத்தும்போது உயிருடன் இருக்கமாட்டேனோ என்று எண்ணுகிறேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார், "அவர்கள் என்னை துரத்தி விடுவார்களா?."
அதற்கவர் ஆமென்று கூறி, "எவரேனுமொருவர் நீர் கொண்டு வந்துள்ளதை போன்று கொண்டு வந்தால் அவர் மக்களால் பகைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். நான் அந்த நாள் வரை உயிரோடிருந்தால் நான் உமக்கு பலமாக உதவுவேன்" என்றார்.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு வரகா மரணமடைந்து விட்டார். இறைச்செய்தியும் தற்காலிகமாக சில நாட்களுக்கு நின்றுப் போனது. (புஹாரி: 1:3A)

Friday, July 17, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 2

(விசுவாசிகளின் அன்னையர்) ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள், "அல்-ஹாரித் பின் ஹிஷாம் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் வினவினார், "அல்லாஹ்வின் தூதரே, தங்களுக்கு இறைசெய்தி (வஹீ) எவ்வாறு இறங்குகிறது?." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள், "சில நேரங்களின் அது மணியோசையை போல இருக்கும். இவ்வகையான வஹீ மற்றெல்லாவற்றையும் விட மிகக்கடினமானதாகும். இந்நிலை, நான் வஹீயை மனனம் செய்துக் கொண்டவுடன் விலகி விடும். சில நேரங்களில் ஒரு மனிதனின் தோற்றத்தில் வானவர் வருகிறார். அவர் சொல்வதை நான் மனனம் செய்துக் கொள்கிறேன். "
ஆயிஷா (ரலி) மேலும் அறிவிக்கிறார், "நிச்சயமாக, நான் நபியவர்களுக்கு வஹீ வரும்பொழுது பார்த்திருக்கிறேன். இறைசெய்தி முடிந்தவுடன் கடுங்குளிரிலும் நபியவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை வடிவதையும் கவனித்துள்ளேன்". (புஹாரி:1:2)

Thursday, July 16, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 1

உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் சொல்லக் கேட்டேன், " நற் செயல்களின் கூலியானது எண்ணத்தை பொறுத்ததே; ஒவ்வொருவரும் அவருடைய கூலியை அவருடைய எண்ணத்தை பொறுத்தே பெறுவார். ஆகவே, எவரொருவர் உலக நன்மைக்காகவோ அல்லது ஒரு பெண்ணை மணமுடிக்க நாடு கடக்கிறாரோ, அவரது பிரயாணம் அந்த எண்ணத்துக்கு (பிரயாணத்துக்கு) மட்டுமே." [1:1:மூல புத்தகம்]


'Umar bin Khattab (R) said, I heard Allah's Messenger (PBUH) saying, "The reward of deeds depends upon the intentions and every person will get the reward according to what he has intended. So, whoever emigrates for wordly benefits or for a woman to marry, his emigration will be for what he emigrated for. [1:1 - O.B]

தினம் ஒரு ஹதீஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்.

தினம் ஒரு ஹதீஸ் எனும் இப்பகுதியில் Dr. Muhsin Khan அவர்கள் மொழி பெயர்த்துள்ள ஸஹிஹ்புஹாரி புத்தகத்தின் ஆங்கில வடிவையும் அதன் தமிழ் மொழியாக்கத்தையும் தரலாம் என்று எண்ணியுள்ளேன்.

இது மொழியாக்கமாக இருப்பதால் சில தவறுகள் இருக்கலாம். தயவு செய்து, இன்ஷா அல்லாஹ் தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

- அபூ ஷாகிர்.

A Quick Refresher

Sunnahs of Prophet Muhammad [PBUH]


Sunnahs of Eating:
Sit and eat on the floor.
Spread out a cloth on the floor first before eating.
Wash both hands up to the wrists.
Recite 'Bismillah wa'la barakatillah' aloud.
Eat with the right hand.
Eat from the side that is in front of you.
If a mors el of food falls down, pick it up, clean it and eat it.
Do not lean and eat.
Do not find fault with the food.
Remove your shoes before eating.
When eating, sit with either both knees on the ground or one knee raised or both knees raised.
Clean the plate and other utensils thoroughly after eating. By doing this, the utensils make dua for one's forgiveness.
Recite dua after eating.
First remove the food then get up.
After meals wash both the hands. Thereafter gargle the mouth.
While eating one should not remain completely silent.
Eat with three fingers if possible.
One should not eat very hot food.
Do not blow on the food.
After eating one should lick his fingers.


Sunnahs of drinking:
A Muslim should drink with the right hand. Shaytaan Drinks with the left hand.
Sit and drink.
Recite 'Bismillah' before drinking.
After drinking say ' Alhamdullilah' .
Drink in 3 breaths removing the utensil from the mouth after each sip.
Do not drink directly from the jug or bottle. One should pour the contents into a glass first and then drink.


Sunnahs of Sleeping:
Discuss with one's family members matters pertaining to Deen before going to sleep (whether it is in the form of reading some Islamic Books or narrating some incidents of Sahabah etc.)..
To sleep in the state of Wuzu.
To make the bed yours el f.
Dust the bed thrice before retiring to bed.
One should change into some other clothes before going to sleep.
It is Sunnah to sleep immediately after Isha Salaah.
To apply surmah in both the eyes.
To brush the teeth with a miswaak.
To sleep on the right hand side.
To sleep with the right palm under the right cheek.
To keep the knees slightly bent when sleeping.
To refrain from sleeping on ones stomach.
To sleep on a bed or to sleep on the floor are both sunnah.
To face Qiblah.
To recite Surah Mulk, before sleeping.
To recite Ayatul Kursi.
To recite Surah Ikhlaas, Surah Falaq and Surah Naas before sleeping 3 times and thereafter blow over the entire body thrice.
Recite Tasbeeh-e-Fathima before sleeping.( i.e. 33 X Subhan Allah 33 X Alhamdulillah and 34 X Allahu Akbar).
To recite the dua before sleeping.
To wake up for Tahajjud Salaah.


Sunnahs on Awakening:
On awakening rub the face and the eyes with the palms of the hands in order to remove the effects of sleep.
When the eyes open in the morning say 'Alhamdullilah' thrice and then recite Kalima Tayyibah.
Thereafter recite the dua on awakening.
On awakening cleanse the mouth with a miswaak.
Sunnahs when wearing clothes:
Rasulullah (Sallallahu alayhi wasallam) loved white Clothing.
When putting on any garment Rasulallah (Sallallahu Alayhi wasallam) always began with the right limb.
When removing any garment Rasullallah (Sallallahu alayhi wasallam) always removed the left limb first.
Males must wear the pants above the ankles. Females should ensure that their lower garment covers their ankles.
Males should wear a 'topee' or turban. Females must wear scarves at all times.
When wearing shoes, first wear the right shoe then the left.
When removing them first remove the left and then The right.


Sunnahs of the Toilet :
Enter the toilet with your head covered.
To enter the toilet with shoes.
Recite the dua before entering the toilet.
Enter with the left foot.
To sit and urinate. One should never urinate whilst Standing.
To leave the toilet with the right foot.
To recite the dua after coming out of the toilet.
One should not face Qiblah or show his back towards the Qiblah.
Do not speak in the toilet.
Be very careful of the splashes of urine (being unmindful in this regard causes one to be punished in the grave).
After relieving oneself, to cleanse oneself using water.


Sunnahs of the Home:
To recite the dua before entering the home.
To greet those that are in the house with 'Assalaamu Alaykum'.
To announce ones arrival by coughing, greeting, etc. Even though it may be your own house.


Other Sunnahs of High Importance:
Using a miswaak is a great Sunnah of Rasulullah (Sallallahu alayhi wasallam). One who makes miswaak when making wuzu and thereafter performs salaah will receive 70 times more reward. It will also enable one to easily recite the kalima at the time of death.
To take a Ghusl bath on a Friday.
To apply itr (applies to men only).
To show mercy to those that are younger than you.
To respect your el ders.
It is sunnah to ponder over Allah Ta'ala and His Creation.
For men to keep a beard that is one fist in length.
To visit a Muslim when he is sick.
To be good towards ones neighbour.
To meet a Muslim with a cheerful face.
To care for the poor and the needy.
To keep good relations with all your relatives.
To honour a guest even though he may not be of a very high position.
To greet all Muslims by saying ' Assalaamu alaykum wa rahmatullahi wa barakaatuhu' .
To keep the gaze on the ground whilst walking.
To speak softly and polit el y.
To command people to do good.
To forbid them from doing evil.
To carry ones shoes in the left hand.
To make wuzu at home before going to the Masjid.
To enter the Masjid with the right foot.
To leave the Masjid with the left foot.
To recite some portion of the Quran Shareef daily.
To be hospitable towards one's guest.
To exchange gifts with one another.
To make dua to Allah Ta'ala for the fulfillment of one's needs in what ever language one desires.
To consult with one's parents, teachers or elders before doing any work.
To respect one's parents.


நன்றி: சகோதரர் நிசார் அஹமது - சிங்கை

முதல் முயற்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

இது எனது முதல் முயற்சி; எப்படி போகிறது பார்போம். இன்ஷா அல்லாஹ்.

அபூ ஷாகிர்

தமிழில் டைப் செய்ய: