Wednesday, July 22, 2009

பகுதி-1: இஸ்லாம் ஐந்து காரியங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை; முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஜக்காத்து வழங்குதல், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் (புஹாரி:1:7)

பின் குறிப்பு:

தொழுகையை நிலை நிறுத்துதல்: ஐந்து நேரமும் குறிப்பிட்ட நேரத்தில் தொழுதல். எழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கண்டித்தும், பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தண்டித்தும் தொழ வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. தங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட முஸ்லிம்களின் தொழுகையில் பொடுபோக்குத் தனம் இருந்தால், அந்த குடும்ப, நகர, சமூக தலைவர், இஸ்லாமிய அரசின் தலைவர் ஆகியோர் அல்லாஹ்விடம் அதற்குப் பொறுப்பாக்கபடுவார்கள். (மேற்கோள்: புஹாரி அடிக்குறிப்பு)

No comments:

தமிழில் டைப் செய்ய: