நபித் தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "யாருடைய இஸ்லாம் மிகச் சிறந்தது? (யார் சிறந்த முஸ்லிம்?)" எனக் கேட்டதற்கு, "எவர் ஒருவர் முஸ்லிம்களை தனது நாவாலோ அல்லது தனது கைகளாலோ துன்புறுத்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்கிறாரோ அவரது (செயலே சிறந்தது)" என பதிலளித்தார்கள் என்று அபூ மூசா (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:10)
குறிப்பு: "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கின்றனரோ அவரது செயலே" என்ற கருத்தையும் சில தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment