Sunday, July 19, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 3B

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி) வஹீ தற்காலிகமாக நின்றிருந்த இடைக்காலத்தை பற்றி கூறும்போது நபி (ஸல்) அவர்களின் பேச்சைப் பற்றி அறிவித்தார்கள்: "நான் நடந்து சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென வானத்திலிருந்து ஒரு சப்தத்தை கேட்டேன். நான் அண்ணார்ந்து பார்க்கும்போது, ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர், வானத்துக்கும் பூமிக்குமிடையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவரைக் கண்டு பயந்தவனாக (வீட்டுக்கு) திரும்பி வந்து 'என்னை போர்த்துங்கள்' என்றேன். அதன் பின்னர் அல்லாஹ் கீழ்க்கண்ட (குர் ஆனின்) திரு வசனங்களை இறக்கினான். "போர்வை போர்த்தியவரே எழும். (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும். ... மேலும் அர்-ருஜ் (சிலைகள்) இடமிருந்து விலகி இரும். " (அல் குர் ஆன்:74:1-5)
அதன் பின்னர், இறைச்செய்தி வருவது பலமாகவும் ஒன்றன் பின் ஒன்றான தொடராகவும் ஆரம்பித்தது." (புஹாரி: 1:3B)

1 comment:

Feros said...

தொடருங்க...

தமிழில் டைப் செய்ய: