Tuesday, July 21, 2009

பகுதி - 1: இறைச் செய்தியின் ஆரம்பம் - 5

(இப்னு அப்பாஸ் ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகுந்த கொடையாளியாக திகழ்ந்தார்கள்; மேலும் ரமலான் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்திக்கும்போது மிக மிக அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். அவர் (ஜிப்ரீல்) ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் சந்தித்து (அது வரை அருளப்பட்டிருந்த) குர்-ஆனை நினைவுபடுத்துவார். இருவருமாக குர்-ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசி மழை தரும் காற்றை விட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே இருந்தார்கள். (புஹாரி:1:5)

No comments:

தமிழில் டைப் செய்ய: