Friday, July 31, 2009

பகுதி-9: அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளம் - 2

உபாதா பின் அஸ்சாமித் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மைச் சுற்றி தமது தோழர்களின் குழுவுடன் அமர்ந்திருந்தபோது கூறினார்கள், "அல்லாஹ்வுடன் வணக்கத்தில் வேறு எதையும் இணைப்பதில்லை, திருடுவதில்லை, விபச்சாரம் செய்வதில்லை, உங்கள் குழந்தைகளை கொல்வதில்லை, யார் மீதும் வேண்டுமென்றே அவதூறு கூறுவதில்லை. நல்ல காரியங்களை (செய்ய கட்டளையிடும்போது) மாறு செய்வதில்லை என என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள்.
உங்களில் யார் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வால் நற்கூலி கொடுக்கப்படுவார்; யார் இந்த பாவங்களில் ஈடுபடுகிறாரோ அவர் இவ்வுலகில் தண்டனையை அனுபவிப்பார். அத்தண்டனை அவரின் பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும், ஒருவர் இப்பாவங்களில் ஈடுபட்டு அல்லாஹ் அவற்றை மறைத்துவிட்டால், அவரை மன்னிப்பதோ அல்லது தண்டிப்பதோ அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளதாகும் (நாட்டத்திலுள்ளதாகும்). " [எனவே, நாங்கள் அவ்வாறு நடப்போம் என உறுதிமொழி கொடுத்தோம்.] (ஸஹீஹ் புஹாரி : 1:17)

2 comments:

Anonymous said...

kaafirkaLai veRuppathu ethan adaiyaaLam?

Allavin peyari cholli appavikaLai kontru kuvippathu ethan adaiyaaLam?

neenkaLellaam kolai veRiyarkaL enkiRa adaiyaaLamaa?

ஏழை said...

துபாய் அனானி,
ரொம்ப உணர்ச்சி வசப்படாதீர்கள். உடம்புக்கு ஆகாது.

தமிழில் டைப் செய்ய: