Friday, August 7, 2009

பகுதி:15 - ஈமான் என்றாலே நற்செயல் என சிலர் வாதிடுகின்றனர்

அபு ஹுரைரா (ரலி) அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "செயல்களில் சிறந்தது எது?" என கேட்கப்பட்டதற்கு, அவர்கள், "அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (முஹம்மது [ஸல்]) மீதும் விசுவாசம் கொள்வது" என்று பதிலளித்தார்கள்.
கேள்வியாளர் மீண்டும், "(நற்செயல்களில்) அடுத்தது எது?" என்று கேட்டார். நபியவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது" என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் மீண்டும், "(நற்செயல்களில்) அடுத்தது எது?" எனக் கேட்டார். நபியவர்கள், "மப்ரூரான ஹஜ் செய்தல்" (அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி, மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக அல்லாமல் செய்யப்பட்ட ஹஜ். மேலும், பாவங்கள் எதிலும் ஈடுபடாமல், நபி வழியில் சரியான பேணுதலுடன் செய்யப்பட்ட ஹஜ்) என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:25)

No comments:

தமிழில் டைப் செய்ய: