Sunday, August 2, 2009

பகுதி-11: நான் உங்கள் அனைவரையும் விட அல்லாஹ்வை மிக அதிகமாக அறிந்தவன் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் கூற்று

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு நல்ல காரியங்களை கட்டளையிடும்போது. அவர்களால் எந்த காரியத்தை இலகுவாக செய்ய முடியுமோ அதை (அவரவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு) மட்டுமே கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) , "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உங்களைப் போலல்ல. (எங்கள் நிலை தங்களுடையதை போன்றதன்று) அல்லாஹ் உங்களது முன் பின் பாவங்களை மன்னித்து விட்டான்." என்று கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்து விட்டார்கள். அந்த கோபம் அவர்களின் முகத்தில் தெரிந்து. பின்னர், நபி (ஸல்) கூறினார்கள், "நான் அல்லாஹ்வை மிகவும் அஞ்சுபவனாகவும், அல்லாஹ்வை உங்கள் அனைவரையும் விட மிகவும் அறிந்தவனாகவும் இருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:19)

No comments:

தமிழில் டைப் செய்ய: